டெல்லி பிபிஓ ஊழியை கற்பழிப்பு வழக்கில் 2 பேர் கைது: இது வரை 500 பேரிடம் விசாரணை
டெல்லி: கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் பிபிஓ ஊழியை கற்பழிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயது மிசோரம் பெண் ஒருவர் தெற்கு டெல்லியில் உள்ள தௌலா குவான் பகுதியில் தங்கி பிபிஓவில் பணி புரிந்து வந்தார். கடந்த நவம்பர் 26-ம் தேதி பணி முடிந்து அவர் தனது தோழியுடன் அதிகாலை 1.20 மணி அளவில் தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் 4 பேரால் டிரக்கில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். பின்னர் மங்கோல்புரியில் அவரைப் போட்டுவிட்டு குற்றவாளிக்ள் தப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஷம்ஷாத், உஸ்மான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இது வரை 500 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட டிரக்கை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.