ஸ்பெக்ட்ரம்: ராசாவின் உதவியாளரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவிடம் அமலாக்கப் பிரிவினர் (Enforcement Directorate) விசாரணை நடத்தினர்.
(அன்னிய செலாவணி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் அமைப்பு தான் அமலாக்கப் பிரிவு ஆகும்)
2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது ராசாவின் தனிச் செயலராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா.
அவரிடம் நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ள விவரம் இன்று வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டப் பிரிவின்படி (Prevention of Money Laundering Act) சந்தோலியாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரிடம் ராசாவின் பண விவகாரங்கள், முதலீடுகள், நிரா ராடியா உடனான உரையாடல்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த அனைத்து பரிமாற்றங்களும் விஷயங்களும் சந்தோலியாவுக்கு தெரியும் என்று அமலாக்கப் பிரிவு கருதுகிறது.
இந் நிலையில் சமீபத்தில் ராசா பதவி விலகி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பு கபில் சிபல் வசம் வந்தவுடன் சந்தோலியாவை கபில் சிபல் அவரது பழைய துறையான இந்திய பொருளாதாரத் துறை பணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய விசாரணையின்போது ஏராளமான விவரங்களை சந்தோலியா அமலாக்கப் பிரிவினரிடம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விவரங்களை சிபிஐயும் கேட்டு்ப் பெற்றுள்ளது.
இவரைத் தொடர்ந்து மேலும் பல அதிகாரிகளிடமும் விசாரணை நடக்கலாம் என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1996ம் ஆண்டில் அன்னிய செலாவணி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும் அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்து விசாரித்தது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications