For Daily Alerts
Just In
மதுரை அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு-விசாரணை கோரிக்கை
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த மாணவி மலர்விழி மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்த மாணவி கல்லூரியில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் உடனே மற்ற மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது. மேலும், இறந்து போன மாணவியின் உடலைப் பார்க்க விடாமல் தடை செய்தது.
இதனால் சக மாணவிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இதே கல்லூரியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இதுபோன்ற மர்ம சாவு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து போலீசார் உண்மை நிலவரத்தை கண்டறிந்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Story first published: Saturday, December 4, 2010, 11:09 [IST]