செங்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் எரிசாராயம் தீவைத்து அழிப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு தேங்காய் லாரியில் மறைத்து வைத்து 207 கேன்களில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தியபோது புளியரை சோதனை சாவடியில் பிடிப்பட்டது.
பிடிப்பட்ட எரிசாராயத்தை செங்கோட்டை கேசவபுரம் அருகேயுள்ள குளத்தில் தீ வைத்து அழிக்கும் பணி நேற்று செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், சங்கரன்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கமணி, மதுவிலக்கு உதவி ஆணையர் (கலால்) காசிலிங்கம், கோட்ட அலுவலர் அமுதா முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து கேன்களில் இருந்தும் எரிசாராயத்தை பாதுகாப்பாக தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications