For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் 14 வயதுப் பெண்ணுக்கு திருமணம்: கோலாலம்பூர் மசூதியில் நடந்தது

By Chakra
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் 14 வயது பெண்ணுக்கும், 23 வயது ஆணுக்கும் விமரிசையாக திருமணம் நடந்தது.

மலேசியாவில் 18 வயது நிரம்பாத மைனர் பெண்கள் தங்கள் பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பெண்கள் 18 வயதிற்கு மேல் தான் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

அதேசமயம், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொள்ள தடைவிதிக்க வேண்டும் என்று பெண்கள் நல ஆர்வலர் ஐவி ஜோசையா கோரி வருகிறார்.

இந்த நிலையில், 14 வயதே ஆன மலேசியப் பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணம் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடந்தது என்று தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

புது மணத் தம்பதிகள் நேற்று கோலாலம்பூரில் உள்ள மசூதி ஒன்றில் வைத்து தங்கள் திருமண வைபவத்தை கொண்டாடினார். இதற்கு கோலாலம்பூர் இஸ்லாமியத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X