தாமஸ் ஏன் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நீடிக்க வேண்டும்?-சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி

தாமஸ் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், ஏன் உங்களது நியமனத்தை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தாமஸுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிரடி உத்தரவிட்டது. இதேபோல மத்திய அரசும் விளக்கமளிக்கக் கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தாமஸ் பதவியில் நீடிப்பார். அதேசமயம், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தலையிட மாட்டார் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது நேரடியாக தாமஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும், வழக்கை ஜனவரி மாதம் 27ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். அன்று தாமஸ் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதுவரை இப்பதவியில் தாமஸ் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications