மதிமுகவுக்கு கலைப்புலி தாணு முழுக்கு-வைகோவுக்கு நீண்ட கடிதம்

எத்தனையோ பேர் மதிமுகவிலிருந்து விலகியுள்ளனர், மதிமுகவை கைவிட்டுள்ளனர். ஆனால் இப்போது மிக முக்கிய நபர் ஒருவர் மதிமுகவிலிருந்து விலகியுள்ளார். அவர் கலைப்புலி தாணு.
அரசியல் ரீதியாக முக்கியமில்லாதவராக இருந்தபோதிலும், மதிமுகவுக்கு மிக முக்கியமானவர் கலைப்புலி தாணு. இன்று மதிமுக தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குச் சொந்தக்காரர் தாணுதான்.
மதிமுக தொடங்கியபோது அலுவலகம் அமைக்க இடம் இல்லாமல் வைகோ தவித்தபோது எழும்பூரில் உள்ள எனது இடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தைரியமாக முன்வந்தவர் தாணு. அன்று முதல் இன்று வரை அவரது இடத்தில்தான் மதிமுக தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது.
மதிமுகவை விட்டபல முக்கியப் புள்ளிகள் விலகிச் சென்றபோதிலும் தாணு மட்டும் வைகோவுடனேயே இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது இளைய மகன் திருமண அழைப்பிதழை முதல்வர் கருணாநிதிக்கு கொடுத்தது தொடர்பாக அவருக்கும், வைகோவுக்கும் இடையே புகைச்சல் மூண்டுள்ளது. இதையடுத்து கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார் தாணு.
இதுகுறித்து அவர் வைகோவுக்கு எழுதியுள்ள மிக நீளமான கடிதத்தில், எனது இளைய மகன் திருமண அழைப்பிதழை முதல்வர் கருணாநிதிக்கு முதலில் கொடுத்தது தொடர்பாக எழுந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கவே இக்கடிதம். நான் பொதுச் செயலாளரான உங்களை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுதொடர்பாக உங்களுடன் பேச முயன்றும் அதை தாங்கள் தட்டிக் கழித்து விட்டீர்கள்.
1998ம் ஆண்டுஎனது மூத்த மகள் கல்யாணத்திற்கு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தபோது அதை தாங்கள் எதிர்க்கவில்லை. அதேபோல 2002ம் ஆண்டு எனது மூத்த மகன் கல்யாண அழைப்பிதழை இவர்களுக்குத் தந்தபோதும் எதிர்க்கவில்லை.ஆனால் இப்போது இளைய மகன் கல்யாண அழைப்பிதழ் விவகாரத்தில் முதல்வருக்கு அழைப்பு விடுத்ததை தாங்கள் எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.
மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் அண்ணா சிலை திறக்கப்பட்டபோது அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டில் மதிமுக மூத்த தலைவர்கள் 8 பேருடைய பெயர்கள் உள்ளன. அதில் 6 பேர் தற்போது கட்சியில் இல்லை. நான் மட்டுமே நீடித்து வந்தேன்.
மதிமுக தொடங்கியது முதல் நான் கட்சியிந் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட்டு வந்தேன். இப்போது திருமண அழைப்பிதழ் விவகாரத்தில் நான் விரட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் தாணு.
மதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும், கலைப் பிரிவு செயலாளராகவும் தாணு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications