டோணி, சச்சின் உள்பட 7 வீரர்கள் தெ. ஆப்பிரிக்கா கிளம்பினர்
மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினரின் 2வது பிரிவு இன்று அங்கு புறப்பட்டுச் சென்றது.
டிசம்பர் 16ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை அபாரமாக வெல்வதற்காக இந்திய வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் முடிவு செய்தார். அதன்படி இந்திய வீரர்களை முன்கூட்டியே தென் ஆப்பிரிக்காவுக்குக் கூட்டிச்சென்று சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அதன்படி இந்திய வீரர்கள் தற்போது படிப்படியாக தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். நேற்று சட்டேஸ்வர் பூஜாரா, ஜெயதேவ் உனத்கத், உமேஷ் யாதவ், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களுடன் ஷேவாக்கும் செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் போகவில்லை.
இந்த நிலையில், இன்று 2வது குழு புறப்பட்டுச் சென்றது. மும்பையிலிருந்து இன்று அதிகாலை இந்த குழு கிளம்பிச் சென்றது. கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த், விருத்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, அணி மேலாளர் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் துபாய் வழியாக கேப்டவுனுக்குக் கிளம்பிச் சென்றனர்.
மீதமுள்ள கெளதம் கம்பீர், ஜாகிர் கான், முரளி விஜய் ஆகியோர் (இவர்கள் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருவதால்) டிசம்பர் 12ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications