டோணி, சச்சின் உள்பட 7 வீரர்கள் தெ. ஆப்பிரிக்கா கிளம்பினர்
மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினரின் 2வது பிரிவு இன்று அங்கு புறப்பட்டுச் சென்றது.
டிசம்பர் 16ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை அபாரமாக வெல்வதற்காக இந்திய வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் முடிவு செய்தார். அதன்படி இந்திய வீரர்களை முன்கூட்டியே தென் ஆப்பிரிக்காவுக்குக் கூட்டிச்சென்று சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அதன்படி இந்திய வீரர்கள் தற்போது படிப்படியாக தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். நேற்று சட்டேஸ்வர் பூஜாரா, ஜெயதேவ் உனத்கத், உமேஷ் யாதவ், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களுடன் ஷேவாக்கும் செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் போகவில்லை.
இந்த நிலையில், இன்று 2வது குழு புறப்பட்டுச் சென்றது. மும்பையிலிருந்து இன்று அதிகாலை இந்த குழு கிளம்பிச் சென்றது. கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த், விருத்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, அணி மேலாளர் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் துபாய் வழியாக கேப்டவுனுக்குக் கிளம்பிச் சென்றனர்.
மீதமுள்ள கெளதம் கம்பீர், ஜாகிர் கான், முரளி விஜய் ஆகியோர் (இவர்கள் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருவதால்) டிசம்பர் 12ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications