லியூ ஜியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கும் விழா-இந்தியா பங்கேற்பு-இலங்கை உள்பட 19 நாடுகள் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil

54 வயதாகும் லியூ, சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் முக்கியப் பிரமுகர் ஆவார். தற்போது 11 ஆண்டு சிறைவாசத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ள 49 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அதேசமயம் சீனாவின் கண்டிப்பு கலந்த கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கொலம்பியா, இலங்கை, டுனிஷியா, சவுதி அரேபியா, செர்பியா, ஈராக், ஈரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 19 நாடுகள் பல்வேறு காரணங்களை காட்டி விழாவை புறக்கணிக்கின்றன.












Click it and Unblock the Notifications