கனடாவில் திருக்குறள் பெயரால் பதவி ஏற்ற தமிழ்ப் பெண்!

Subscribe to Oneindia Tamil

Trustee Juanita Nathan
டொரன்டோ: கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார். அதைவிட சிறப்பு, திருக்குறளின் பெயரில் அவர் பதவி ஏற்றுக் கொண்டதுதான்!

கனடாவின் மர்கம் (Markham area 4) பகுதியில் பொது பள்ளி வாரியத்துக்கான 2010 தேர்தலில் போட்டியிட்டார் ஜுனிதா நாதன். இவர் கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்.

இந்தத் தேர்தலில் 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற அவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் தமிழரின் பொதுமறை எனப் புகழப்படும் திருக்குறள் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

அவருடன் பதவிஏற்ற மற்றவர்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர்.

"பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் வாழ்வின் நெறிகளை சிறப்பாக சொல்கிறது. கல்வியின் பெருமைகளையும், நீதியையும் இத்தனை சிறப்பாக வேறு எந்த நூலும் சொன்னதில்லை" என்றார் ஜுனிதா நாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+