ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இரட்டை குண்டுவெடிப்பு-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil

இந்த குண்டுவெடிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பீதி ஏற்பட்டுள்ளது.
மத்திய ஸ்டாக்ஹோமில் உள்ள டிராட்டினிகடான் என்ற இடத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்தப் பகுதிய வர்த்தகம் அதிக அளவில் நடைபெறும் பகுதியாகும். இந்த குண்டுவெடிப்பு நடந்த அடுத்த சில விநாடிகளில் அதே தெருவில் இன்னொரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 2 பேர் காயமடைந்தனர்.
இருகுண்டுவெடிப்புகளுக்கும் யார் காரணம் என்பது தெரியவில்லை. ஆனால் இது தீவிரவாத செயலாகவே தோன்றுவதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்வீடன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications