சிபிஐ ரெய்டு ரொம்பத் தாமதம், போதுமானதும் அல்ல-பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைகள், ரெய்டுகள் மிக மிக தாமதமானவை. இது போதுமானதாகவும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
இன்று நடந்த சிபிஐ ரெய்டுகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ மிக மிக தாமதமாக, மிக மிக குறைந்த அளவிலான நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஜேபிசி விசாரணை ஒன்று மட்டுமே உண்மையை வெளிக் கொண்டு வர முடியும். அது மட்டுமே இப்போதைக்கு பொருத்தமானதாகும்.
தற்போது சிபிஐ நடத்தி வரும் ரெய்டுகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரங்களை மறைக்க அல்லது அழிக்க போதிய கால அவகாசம் கொடுத்தது போல இத்தனை காலம் அமைதியாக இருந்து விட்டுஇப்போது சிபிஐ ரெய்டு நடத்தி வருவது போதிய பலனைத் தராது.
இதுபோன்ற பிரச்சினைகளில் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களால் மட்டுமே உண்மையை வெளிக் கொண்டுவர முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications