விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு சந்திரபாபு நாயுடு சாகும் வரை உண்ணாவிரதம்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த ஓராண்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி அறிவித்துள்ள நிவாரண நிதி அதிருப்தி அளிக்கிறது. அது யானை பசிக்கு சோளப்பொறி போன்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத், ஆதர்ஷ் நகரில் இருக்கும் புதிய எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் தனது உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார் நாயுடு. முன்னதாக என்.டி.ஆர். கட்டில் இருக்கும் என்.டி. ராமாராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். என்.டி.ராமாராவ் உயிருடன் இருந்தபோது அவரைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்தவர் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா (இவர் என்டிஆர் மகன்), முன்னாள் அமைச்சர் கே. எர்ரன் நாயுடு, மூத்த தலைவர்கள் நாகம் ஜனார்தன ரெட்டி, டி. தேவேந்தர் கௌட் மற்றும் 10 எம்.எல்.ஏ. க்கள் நாயுடுவுடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது,
விவசாயிகளின் துயரத்தை நினைக்கையில் எனக்கு கண்ணீர் வருகிறது. கடந்த ஒராண்டில் மட்டும் குறைந்தது 5 தடவையாவது இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ அரசு தவறிவிட்டது.
நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பருத்தி, புகையிலை போன்ற வர்த்தக பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications