விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு சந்திரபாபு நாயுடு சாகும் வரை உண்ணாவிரதம்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த ஓராண்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி அறிவித்துள்ள நிவாரண நிதி அதிருப்தி அளிக்கிறது. அது யானை பசிக்கு சோளப்பொறி போன்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத், ஆதர்ஷ் நகரில் இருக்கும் புதிய எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் தனது உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார் நாயுடு. முன்னதாக என்.டி.ஆர். கட்டில் இருக்கும் என்.டி. ராமாராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். என்.டி.ராமாராவ் உயிருடன் இருந்தபோது அவரைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்தவர் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா (இவர் என்டிஆர் மகன்), முன்னாள் அமைச்சர் கே. எர்ரன் நாயுடு, மூத்த தலைவர்கள் நாகம் ஜனார்தன ரெட்டி, டி. தேவேந்தர் கௌட் மற்றும் 10 எம்.எல்.ஏ. க்கள் நாயுடுவுடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது,
விவசாயிகளின் துயரத்தை நினைக்கையில் எனக்கு கண்ணீர் வருகிறது. கடந்த ஒராண்டில் மட்டும் குறைந்தது 5 தடவையாவது இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ அரசு தவறிவிட்டது.
நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பருத்தி, புகையிலை போன்ற வர்த்தக பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications