மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு: ரூ. 50,000 பறிமுதல்
ஜார்கிராம்: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி முகாமை இணை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிதாதி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி முகாம் ஒன்று செயல்பட்டு வருவது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடு்தது ஜார்கிராம் எஸ்பி பிரவீன் த்ரிபாதி தலைமையிலான போலீசார் நேற்றிரவு அஙகு சென்றனர்.
அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஏராளமான மாவோயிஸ்ட்கள் காயம் அடைந்தனர். இன்று அதிகாலை போலீசாரிடம் இருந்து அவர்கள் தப்பிவிட்டனர்.
அந்த முகாமில் இருந்து போலீசார் 4 துப்பாக்கிகள், 70 தோட்டாக்கள், டெடனேட்டர்கள், கை வெடிகள் மற்றும் இதர வெடிமருந்துகள், செல்போன்கள், சிம் கார்டுகள், மருந்துகள், ரூ. 50,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அங்கு சுற்றித் திரிந்த ஆசாத் சிங் என்பவரை கைது செய்தனர். அவருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications