For Daily Alerts
Just In
கோவை காங்கிரஸ் அலுவலம் மீது கல் வீச்சு: கட்சியினர் சாலை மறியல்
கோவை: கோவையில் காங்கிரஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் ரேஸ்கோர்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் திடீர் என கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் கட்சி அலுவலக கண்ணாடிகள் நொறுங்கியது.
இந்த கல்வீச்சு சம்பவம் பற்றி அறிந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அங்கு குவிந்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Some unidentified persons hurled stones at Coimbatore Congress office. Tension prevails there because of this incident. Police have registered a case and starts investigation.
Story first published: Monday, December 20, 2010, 13:49 [IST]