ராடியா வீட்டுக்குச் சென்று சிபிஐ விசாரணை-ஆஜராக அவகாசம் கேட்கிறார் ராஜா

நேற்று இதே வழக்கில் முன்னாள் டிராய் அமைப்பின் தலைவர் பிரதீப் பைஜால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இன்று காலை பத்து மணியளவில் ராடியாவின் சத்திரபூர் பண்ணை வீட்டுக்கு சிபிஐ குழு விரைந்தது. அங்கு வைத்து ராடியாவிடம் விசாரணை நடைபெற்றது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராடியாவுக்கு உள்ள தொடர்புகள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட்டது.
முன்னதாக சமீபத்தில் ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலும், அவரது வீடு, பண்ணை வீட்டிலும் 2 முறை சிபிஐ
அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
பண மோசடி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராடியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் விரைவில் ராடியா மீது வழக்கு தொடரப்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசுப் பணிகளில் தனது செல்வாக்கின் மூலம் தலையிட்டு ஆதாயம் பார்த்துள்ளார் ராடியா என்று சிபிஐ கருதுகிறது.
இன்றைய விசாரணையின்போது பல முக்கியத் தகவல்களை சிபிஐ கேட்டுப் பெற்றதாக தெரிகிறது. மீண்டும் ராடியாவை சிபிஐ விசாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று ராடியாவை விசாரணைக்குட்படுத்தியபோது ஒரு பெண் அதிகாரியும் உடன் இருந்தார். ராடியா அலுவலகம், வீடு ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் குறித்து ராடியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை ராடியா மறுத்தாராம். இருப்பினும் சில முக்கிய ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி கேட்டுள்ளனர்.
இதற்கிடையே ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சிபிஐ அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் கேட்கும் ராஜா:
இதற்கிடையே சிபிஐ விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா சிறிது கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வார இறுதியில் அவரை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ராஜா தரப்பிலிருந்து சிபிஐக்குத் தகவல் போயுள்ளதாம்.
எனவே இந்த வாரத்திற்குள் ராஜா விசாரிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications