ராடியா வீட்டுக்குச் சென்று சிபிஐ விசாரணை-ஆஜராக அவகாசம் கேட்கிறார் ராஜா

நேற்று இதே வழக்கில் முன்னாள் டிராய் அமைப்பின் தலைவர் பிரதீப் பைஜால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இன்று காலை பத்து மணியளவில் ராடியாவின் சத்திரபூர் பண்ணை வீட்டுக்கு சிபிஐ குழு விரைந்தது. அங்கு வைத்து ராடியாவிடம் விசாரணை நடைபெற்றது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராடியாவுக்கு உள்ள தொடர்புகள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட்டது.
முன்னதாக சமீபத்தில் ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலும், அவரது வீடு, பண்ணை வீட்டிலும் 2 முறை சிபிஐ
அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
பண மோசடி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராடியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் விரைவில் ராடியா மீது வழக்கு தொடரப்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசுப் பணிகளில் தனது செல்வாக்கின் மூலம் தலையிட்டு ஆதாயம் பார்த்துள்ளார் ராடியா என்று சிபிஐ கருதுகிறது.
இன்றைய விசாரணையின்போது பல முக்கியத் தகவல்களை சிபிஐ கேட்டுப் பெற்றதாக தெரிகிறது. மீண்டும் ராடியாவை சிபிஐ விசாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று ராடியாவை விசாரணைக்குட்படுத்தியபோது ஒரு பெண் அதிகாரியும் உடன் இருந்தார். ராடியா அலுவலகம், வீடு ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் குறித்து ராடியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை ராடியா மறுத்தாராம். இருப்பினும் சில முக்கிய ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி கேட்டுள்ளனர்.
இதற்கிடையே ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சிபிஐ அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் கேட்கும் ராஜா:
இதற்கிடையே சிபிஐ விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா சிறிது கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வார இறுதியில் அவரை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ராஜா தரப்பிலிருந்து சிபிஐக்குத் தகவல் போயுள்ளதாம்.
எனவே இந்த வாரத்திற்குள் ராஜா விசாரிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications