மைசூர் ஏரிக்குள் டெம்போ கவிழ்ந்த விபத்து: தலைமறைவான டிரைவர் கைது
மைசூர்: கடந்த வாரம் மைசூர் ஏரியில் டெம்போ கவிழ்ந்து 31 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து தலைமறைவான டெம்போ டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா அரலகுப்பே மற்றும் கட்டேரி கிராமத்தை சேர்ந்த 34 பேர் ஒரு டெம்போவில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் நடந்த திருமண விழாவிற்குச் சென்றனர்.
திருமணம் முடிந்த பிறகு நேற்று மாலை சொந்த ஊருக்கு அதே டெம்போவில் திரும்பிக் கொண்டிருந்தனர். மைசூர் விமானநிலையம் அருகே வந்து கொண்டிருக்கையில் ஒரு பேருந்தை முந்தும்போது டெம்போ அங்கிருந்த தலவாய் ஏரியில் கவிழ்ந்தது. இதில் டெம்போவில் பயணம் செய்தவர்களில் 31 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிர் இழந்தனர். இறந்தவர்களில் 24 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் அடக்கம்.
இந்த டெம்போவை ஓட்டிச் சென்ற டிரைவர் சேத்தன் லுமர் (30) தலைமறைவானார். அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications