For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொன்றவர் கைது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் மாடசாமி (29) என்பவரை நேற்று போலீசார் கைது சென்றனர்.

தூத்துக்குடியை அடுத்த காயலூரணியைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் மகள் ரூபிகா(19). அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் குப்பை கொட்டச் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் ரூபிகா அந்தப் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக மிதந்தார். அவர் அணிந்திருந்த உடை கிழிந்திருந்தது. மேலும், அவர் உடம்பில் நகக்கீரல்கள் இருந்தன. இதனால் அவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனறு போலீசார் சந்தேகித்தனர்.

இந்நிலையில் போலீசார் மாடசாமி என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் மாடசாமி கூறியதாவது,

குப்பை கொட்ட வந்து ரூபிகாவை கடத்திச் சென்றேன். அவர் கூச்சல் போட முயன்றதால் நான் அவர் தலையில் அடித்தேன். உடனே அவர் மயக்கம் அடைந்துவிட்டார். பின்னர் அவரை கற்பழித்துக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

English summary
A college girl near Tuticorin was raped and killed. Her body was found in a pond with injuries. Police have arrested a 29 year old man who accepted the charge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X