ஆயுதங்களோடு வந்து, வாயில் வந்தபடி பேசி.. விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை: திமுகவினரின் தூண்டுதலின் பேரில் தேமுதிகவினர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்குப் போட்டுள்ளனர். இந்தப் போக்கு தொடருமானால் இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் அனுமதியுடன் தேமுதிக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் அதன் நோக்கம் குறித்து பேசுவது இயல்பு. எதிர்க்கட்சிகளின் முறையான விமர்சனத்தை ஆளுங்கட்சியினர் தாங்கி கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் வேண்டுமானால் தனியே கூட்டம் போட்டு அவர்கள் தரப்பை பொதுமக்களுக்கு விளக்கி இருக்கலாம்.
அதை விட்டுவிட்டு பதிலாக ஆயுதங்களோடு வந்து, வாயில் வந்தபடி பேசியும், உண்ணாவிரதம் இருந்தோரை மிரட்டியும், கட்சியின் தலைவர்களை தரக்குறைவாக பேசியும், ஆளும் கட்சியினரே மிரட்டலில் ஈடுபட்டிருப்பது அவர்களின் ஆணவப் போக்கையும், அதிகார அத்துமீறலையும் காட்டுகிறது.
இத்தகைய போக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆளுகின்ற திமுக விடும் சவாலாகும். ஆளும் கட்சியின் இந்த அகம்பாவ நடவடிக்கை அனைத்தும், காவல்துறையின் முன்பே அரங்கேறி இருக்கிறது.
காவல் துறை அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டிய கடமை கொண்டது. ஆனால், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் தேமுதிகவினர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர்.
இந்தப் போக்கு தொடருமானால் இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்.
கிருஸ்துமஸ் நன்னாளில் ஆங்காங்கே கிருஸ்துவ சமுதாயத்தினருடன் சேர்ந்து, தங்களால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி தேமுதிக தொண்டர்கள் கொண்டாட வேண்டும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச்சில் 25ம் தேதி காலை 9 மணிக்கு நானும் கலந்து கொண்டு மட்டன் பிரியாணியும், கேக்குகளையும் வழங்க உள்ளேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications