உளுந்தூர்ப்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்-சென்னை வரும் ரயில்கள் தாமதம்
உளுந்தூர் பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதை ரயில்வே ஊழியர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பொதிகை, முத்துநகர், அனந்தபுரி,சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. காலை 5 மணியளவில்தான் தண்டவாளம் சரி செய்யப்பட்டது. இதையடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றன.
தென் மாவட்டங்களில் அடிக்கடி ரயில் தண்டவாளத்தில் விரிசல், ரயில் என்ஜினில் கோளாறு என்று தொடர்ந்து வருவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது கிட்டத்தட்ட தினசரி செயலாகவே மாறி வருகிறது. முழுமையாக தண்டவாளத்தை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் அதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும், பழுது அடையாத நல்ல என்ஜின்களை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொருத்த வேண்டும் என்று கோருகிறார்கள் அப்பாவிப் பயணிகள்.












Click it and Unblock the Notifications