கரூர் உள்ளாட்சி தேர்தல்- திமுக விறுவிறு...அதிமுக மவுனம்!: தேமுதிகவில் ஆள் இல்லை?
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் மல்லிகா என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கரூர் நகராட்சியில் காலியாகவுள்ள 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜனவரி 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந் நிலையில், திமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன் மனைவி மல்லிகா (35) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் பாரதியார் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதே போல தேமுதிகவிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட ஆள் இல்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications