வட கிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்-மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் வட கிழக்கில் கடும் பனிப் புயல் வீசியது. 2 அடி அளவுக்கு அடர்த்தியாக கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து உள்ளிட்டவை ஸ்தம்பித்தன.
வார விடுமுறை முடிந்து வீடுகளுக்குத் திரும்ப வேண்டியோர் பனிப் புயல் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ஆங்காங்கு தவித்து வருகின்றனர்.
விமான நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கின்றனர்.
கரோலினா முதல் மெய்ன் வரையிலான பகுதிகளில் மணிக்கு 129 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்றும், பனிப் புயலும் சேர்ந்து மக்களை முடக்கி விட்டது.
சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. ரயில்வே டிராக்குகள், ரன்வேக்களும் பனிமயமாகியுள்ளன. தெருக்கள், வீடுகள் மீது பனி குவிந்து கிடக்கிறது.
இவற்றை அப்புறப்படுத்தி இயல்பு நிலையைத் திரும்ப வைக்கு அதிகாரிகள் கடுமையாக முயன்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications