பொதுக்கணக்கு குழு விசாரணையே போதும்-சுப்பிரமணிய சாமி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி விசாரணையே போதுமானு என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. கூட்டுக் குழு அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. எனினும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையே போதுமானது என்பது என் கருத்து.
பிரதமரை அழைத்து விசாரிக்க பொதுக் கணக்குக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பதாலேயே, நாடாளுமன்றக் கூட்டுக் குழு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. எனினும், பொது கணக்குக் குழு முன்பு ஆஜராக பிரதமர் தாமாகவே முன்வந்துள்ள நிலையில், இனி பிரச்சினை இல்லை.
பொதுக் கணக்குக் குழுவுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதான் தலைவராக உள்ளார். அலைக்கற்றை தொடர்பான எல்லா விவரங்களும் அவருக்கு நன்கு தெரியும். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான எல்லா விவரங்களையும் விசாரித்து, கண்டறிவதற்கான திறன் பொதுக் கணக்குக் குழுவுக்கு உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றிய டைரியில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொடர்புடைய முன்னணி அரசியல்வாதிகள் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய இணையமைச்சராக இருந்து, அண்மையில் மாநில முதல்வராக பதவியேற்றவரும் அவர்களில் ஒருவர். இவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார் சாமி.
முதல்வர் கருணாநிதிக்கு 'கெடு'!
இதற்கிடையே, தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம், முறைகேடாக ஒதுக்கியுள்ள நிலம் மற்றும் வீடுகளை முதல்வர் கருணாநிதி, பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும்,'' என சாமி புதுக் கெடு விதித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. கடைசியில் என்ன ஆகிறது என்று பார்க்கலாம். இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன்.
வரும் சட்டசபைத் தேர்தலில், தமிழகம், கேரளத்தில் ஜனதா கட்சி போட்டியிடும். தமிழகத்தில், முதல்வர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலம், வீடுகளை தவறாக பலருக்கு ஒதுக்கியுள்ளார்.
முறைகேடாக ஒதுக்கப்பட்ட அந்த நிலங்களை பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், தேர்தலுக்குள் அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார் சாமி.
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications