பொதுக்கணக்கு குழு விசாரணையே போதும்-சுப்பிரமணிய சாமி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி விசாரணையே போதுமானு என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. கூட்டுக் குழு அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. எனினும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையே போதுமானது என்பது என் கருத்து.
பிரதமரை அழைத்து விசாரிக்க பொதுக் கணக்குக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பதாலேயே, நாடாளுமன்றக் கூட்டுக் குழு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. எனினும், பொது கணக்குக் குழு முன்பு ஆஜராக பிரதமர் தாமாகவே முன்வந்துள்ள நிலையில், இனி பிரச்சினை இல்லை.
பொதுக் கணக்குக் குழுவுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதான் தலைவராக உள்ளார். அலைக்கற்றை தொடர்பான எல்லா விவரங்களும் அவருக்கு நன்கு தெரியும். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான எல்லா விவரங்களையும் விசாரித்து, கண்டறிவதற்கான திறன் பொதுக் கணக்குக் குழுவுக்கு உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றிய டைரியில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொடர்புடைய முன்னணி அரசியல்வாதிகள் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய இணையமைச்சராக இருந்து, அண்மையில் மாநில முதல்வராக பதவியேற்றவரும் அவர்களில் ஒருவர். இவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார் சாமி.
முதல்வர் கருணாநிதிக்கு 'கெடு'!
இதற்கிடையே, தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம், முறைகேடாக ஒதுக்கியுள்ள நிலம் மற்றும் வீடுகளை முதல்வர் கருணாநிதி, பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும்,'' என சாமி புதுக் கெடு விதித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. கடைசியில் என்ன ஆகிறது என்று பார்க்கலாம். இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன்.
வரும் சட்டசபைத் தேர்தலில், தமிழகம், கேரளத்தில் ஜனதா கட்சி போட்டியிடும். தமிழகத்தில், முதல்வர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலம், வீடுகளை தவறாக பலருக்கு ஒதுக்கியுள்ளார்.
முறைகேடாக ஒதுக்கப்பட்ட அந்த நிலங்களை பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், தேர்தலுக்குள் அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார் சாமி.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications