800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
நெல்லை: நாடு முழுவதும் உள்ள 800 தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி ஏற்படுத்த தபால் துறை தி்ட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
மக்களிடம் நம்பிக்கை பெற்ற தபால்துறை வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தங்க விற்பனை, மியூச்சுவல் பண்ட்,இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சரக்கு போக்குவரத்திலும் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டிற்கே வந்து பொருட்களை எடுத்துச் சென்று டோர் டெலிவரி கொடுக்கும் வசதியும் உள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தபால்துறை தற்போது ஏடிஎம் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கதிட்டமிட்டுள்ளது.
மேலும் தபால் நிலையங்கள் ஏற்கனவே கம்யூட்டர் மயமாகி விட்டன. இதன் மூலம் ஊழியர்களுக்கு வேலை பளு குறைந்ததுடன் வாடிக்கையாளர்களுக்கும் துரித சேவை கிடைத்து வருகிறது.
சேமிப்பு கணக்கில் நாட்டிலேயே முதல் இடத்தை தபால் துறை வகித்து வருவதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் உள்ளது போல் தபால் நிலையங்களிலும் ஏடிஎம் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்கான முற்சியில் இறங்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications