கோவில்பட்டியில் பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தாறுமறாக ஓடிய தனியார் பஸ் பயணிகள் கூட்டத்தில் புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு ஒரு தனியார் பஸ் டீசல் போட்டு விட்டு கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தது.

வேலாயுதபுரம் பாலத்தில் வரும்போது திடீரென பஸ் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரயில் நிலையம் முன்பு பஸ்சுக்காக காத்திருந்த கூட்டத்தில் புகுந்தது. பி்ன்னர் அங்கிருந்த கார், பைக் மீது மோதி நின்றது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் இறந்தார்.

கார் டிரைவர் சிவகாசியைச் சேர்ந்த சீனிவாசன் படுகாயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் பெயர் விபரம் தெரிய வந்துள்ளது.

1. கார்மேகம்-சங்கரன்கோவில்
2.பால்பாண்டியன்-மதுரை, மேலூர்
3. முத்துகுமார், சிந்தாமணி நகர், கோவி்ல்பட்டி
4. முத்துகுமாரின் மனைவி வேலம்மாள்
5. முத்துகுமாரின் மகன் பிரகாஷ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+