ஜனவரி 4ல் ரூ. 500 கோடி பங்குகள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஆண்டு பிணைய பத்திர பங்குகளை ஏலம் விட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஆண்டு பிணைய பத்திரங்கள் பங்குகளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்ட அலுவலகத்தில் வரும் 4-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
போட்டி கேட்புகள் அன்றைய தினம் 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், போட்டியற்ற கேட்புகள் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பங்குகளை வாங்க வரும் 4-ம் தேதி அன்று மின்னனு படிவம் சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம் வெளியி்ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications