நித்தியானந்தாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஞ்சிதா, ஜூஹி சாவ்லா, மாளவிகா

நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்த காட்சி வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதா இப்போது மீண்டும் வெளியுலகத்திற்குத் திரும்பி விட்டார். நித்தியானந்தாவுடன் இணைந்து அவர் தீவிரமாக செயல்படுவார் என்பதை அவரது செயல்கள் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன.
வந்த வேகத்தில் லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயற்சித்தார் என்று ரஞ்சிதா புதிய புகாரைக் கிளப்பியுள்ளார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் 34வது பிறந்த நாளையொட்டி பிதாதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஆனந்த்தோச்வா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ரஞ்சிதா கலந்து கொண்டார். ரஞ்சிதா மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா, கர்நாடகத்தைச் சேர்ந்த டிவி நடிகை மாளவிகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மூன்று நடிகைகளும் சனிக்கிழமை நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சென்று அவரைத் தனித் தனியாக சந்தித்தனர். அவரிடம் தங்களது சொந்தப் பிரச்சினைகள் குறித்து மூவரும் பேசியதாக கூறப்படுகிறது.
மேலம் ஆனந்தோத்சவா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் மிகக் குறைவானரே வந்திருந்தனர்.
திசை திருப்ப முயற்சிக்கும் நித்தியானந்தா-போலீஸ்
இதற்கிடையே தன்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயற்சித்தார் என்று நடிகை ரஞ்சிதா கூறுவதும், வீடியோவில் இருப்பது நானோ, சாமியாரோ அல்ல என்றும் ரஞ்சிதா கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வீடியோவில் இருப்பது ரஞ்சிதா, நித்தியானந்தா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பது அவர்கள்தான் என்பதும் தடயவியல் சோதனை மூலம் நிரூபனமாகியுள்ளது. இதை மறுக்க முடியாது. இதை கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம்.
மேலும், ரஞ்சிதா தன்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயன்றதாக இப்போது திடீரென சொல்வது நம்பும்படியாக இல்லை. வழக்கை திசை திருப்ப நித்தியானந்தாதான் இப்படி ரஞ்சிதாவை பின்னாலிருந்து இயக்குவதாக கருதுகிறோம். வழக்கை திசை திருப்பி, அனைவரையும் குழப்பி, அதில் ஆதாயம் காணும் முயற்சியாகவே இதைக் கருதுகிறோம் என்றனர்.
அதேசமயம், ரஞ்சிதா செய்தியாளர்களிடம் பேசியதற்கும், நித்தியானந்தா கைதான பிறகு போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்திற்கும் முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
2010ம் ஆண்டு மே மே மாதம் கர்நாடக சிஐடி போலீஸாரிடம் நித்தியானந்தா அளித்த வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் பலமுறை தான் ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொ்ண்டதாக நித்தியானந்தா கூறியதாக தெரிகிறது. மேலு், ஒரு வருடத்திற்கும் மேலாக தனது ஆசிரமத்தில் ரஞ்சிதா தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நித்தியானந்தா. அத்தோடு இல்லாமல், 14க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனக்கு உடல் ரீதியான உறவு இருந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் நித்தியானந்தா. ஆனால் இதற்கு நேர் மாறாக பேசியுள்ளார் ரஞ்சிதா. எனவேதான் வழக்கை திசை திருப்ப ரஞ்சிதா மூலமாக நித்தியானந்தா முயல்வதாக கர்நாடக சிஐடி போலீஸார் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications