நித்தியானந்தாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஞ்சிதா, ஜூஹி சாவ்லா, மாளவிகா

நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்த காட்சி வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதா இப்போது மீண்டும் வெளியுலகத்திற்குத் திரும்பி விட்டார். நித்தியானந்தாவுடன் இணைந்து அவர் தீவிரமாக செயல்படுவார் என்பதை அவரது செயல்கள் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன.
வந்த வேகத்தில் லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயற்சித்தார் என்று ரஞ்சிதா புதிய புகாரைக் கிளப்பியுள்ளார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் 34வது பிறந்த நாளையொட்டி பிதாதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஆனந்த்தோச்வா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ரஞ்சிதா கலந்து கொண்டார். ரஞ்சிதா மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா, கர்நாடகத்தைச் சேர்ந்த டிவி நடிகை மாளவிகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மூன்று நடிகைகளும் சனிக்கிழமை நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சென்று அவரைத் தனித் தனியாக சந்தித்தனர். அவரிடம் தங்களது சொந்தப் பிரச்சினைகள் குறித்து மூவரும் பேசியதாக கூறப்படுகிறது.
மேலம் ஆனந்தோத்சவா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் மிகக் குறைவானரே வந்திருந்தனர்.
திசை திருப்ப முயற்சிக்கும் நித்தியானந்தா-போலீஸ்
இதற்கிடையே தன்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயற்சித்தார் என்று நடிகை ரஞ்சிதா கூறுவதும், வீடியோவில் இருப்பது நானோ, சாமியாரோ அல்ல என்றும் ரஞ்சிதா கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வீடியோவில் இருப்பது ரஞ்சிதா, நித்தியானந்தா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பது அவர்கள்தான் என்பதும் தடயவியல் சோதனை மூலம் நிரூபனமாகியுள்ளது. இதை மறுக்க முடியாது. இதை கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம்.
மேலும், ரஞ்சிதா தன்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயன்றதாக இப்போது திடீரென சொல்வது நம்பும்படியாக இல்லை. வழக்கை திசை திருப்ப நித்தியானந்தாதான் இப்படி ரஞ்சிதாவை பின்னாலிருந்து இயக்குவதாக கருதுகிறோம். வழக்கை திசை திருப்பி, அனைவரையும் குழப்பி, அதில் ஆதாயம் காணும் முயற்சியாகவே இதைக் கருதுகிறோம் என்றனர்.
அதேசமயம், ரஞ்சிதா செய்தியாளர்களிடம் பேசியதற்கும், நித்தியானந்தா கைதான பிறகு போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்திற்கும் முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
2010ம் ஆண்டு மே மே மாதம் கர்நாடக சிஐடி போலீஸாரிடம் நித்தியானந்தா அளித்த வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் பலமுறை தான் ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொ்ண்டதாக நித்தியானந்தா கூறியதாக தெரிகிறது. மேலு், ஒரு வருடத்திற்கும் மேலாக தனது ஆசிரமத்தில் ரஞ்சிதா தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நித்தியானந்தா. அத்தோடு இல்லாமல், 14க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனக்கு உடல் ரீதியான உறவு இருந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் நித்தியானந்தா. ஆனால் இதற்கு நேர் மாறாக பேசியுள்ளார் ரஞ்சிதா. எனவேதான் வழக்கை திசை திருப்ப ரஞ்சிதா மூலமாக நித்தியானந்தா முயல்வதாக கர்நாடக சிஐடி போலீஸார் கூறியுள்ளனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications