மாவோயிஸ்ட் தாக்கினால் என்ன செய்வது?-மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை மூலமாக சட்டிஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது ராணுவம்.
இதுகுறித்து அக்கடிதத்தில் ராணுவம் கேட்டுள்ளதாவது...
மாவோயிஸ்ட் நக்சலைட்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் திருப்பித் தாக்கலாமா? அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா அல்லது மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களை மட்டும் சேகரிக்க வேண்டுமா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளது ராணுவம்.
சட்டிஸ்கர் மாநிலம் அபுஜாத் காட்டுப் பகுதிக்கு அருகே மாவோயிஸ்டுகளின் கோட்டைப் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் அமைக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாவோயிஸ்டுகள் விஷயத்தில் ராணும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இந்த விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதாம்.
மேலும், இப்பகுதியில் சாலை இணைப்பு வசதி இல்லை. இதை செய்து தர வேண்டும் என்றும் ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications