சட்டசபைத் தேர்தல்-சோ உள்ளிட்டோருடன் ஜெ. ஆலோசனை

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து இது நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் உத்திகள், கூட்டணி குறித்து, கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து இதில் ஜெயலலிதா விவாதித்தார்.
இதேபோல துக்ளக் ஆசிரியர் சோவும், ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக 3 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கிடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓ.பி தலைமையில் தமிழக குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன் ஆகியோரைக் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு தம்பித்துரை, செம்மலை
புதுச்சேரி மாநில சட்டமன்ற பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை,. அமைப்புச் செயலாளர் செம்மலை ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு பாலகங்கா, மைத்ரேயன்
கேரள மாநில சட்டமன்ற பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா, மருத்துவ அணி தலைவர் மைத்ரேயன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த விவரத்தை வெளியிடுவேன் என ஜெயலலிதா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான குழுவை அவர் அறிவித்துள்ளார்.
இந்தக் குழு முதல் கட்டமாக மதிமுக, சிபிஎம், சிபிஐ மற்றும் இதர குட்டிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களை விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. அதன் பின்னர் புதிதாக ஏதாவது கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications