சிலி கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி அபாயம் இல்லை
வாஷிங்டன்: தென் அமெரிக்க நாடான சிலியின் கடல் பகுதியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 8.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 7.2 ரிக்டர் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய சிலியின் பியோ பியோ என்ற இடத்திற்கு அருகே கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால் சிறிய அளவிலான சுனாமிகள் உருவாகி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நிலநடுக்கம் குறித்து பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த செய்திக்குறிப்பில், இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்தது என்றாலும் கூட சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால் சில நேரங்களில் சிறிய அளவிலான சுனாமிகள் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த அளவிலான நிலநடுக்கத்திற்கு சிறிய சுனாமியே பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications