நிதி திரட்ட தனது காரை ரூ. 5 கோடிக்கு ஏலம் விடும் ஈரான் அதிபர்
Subscribe to Oneindia Tamil

ஈரான் அதிபர் அகமதிநிஜாத் ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீடு வழங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தன் பங்கிற்கு நிதி வழங்க தான் 1977-ம் ஆண்டு வாங்கிய வெள்ளை நிற பியாகட் செடான் காரை ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் விடுகிறார். இதில் பிற நாட்டவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏலம் குறி்தது இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு பின்னர் அபதான் நகரில் நடக்கவிருக்கிறது. ஏல விண்ணப்பங்களை இந்த மாத இறுதி வரை சமர்பிக்கலாம்.
கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய காரை அவர் கடந்த 2005-ம் ஆண்டு டெஹ்ரான் மேயராக பதவி வகித்தவரை பயன்படுத்தினார். அவர் அதிபரான பிறகு தான் பாதுகாப்பு கருதி அதை பயன்படு்ததவில்லை.
ஈரானில் பியட் செடானின் தற்போதைய விலை ரூ. 1 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications