கே.ஜி.பாலகிருஷ்ணன் விவகாரம் குறித்து பேசக் கூடாது என நெருக்குதல்-கிருஷ்ணய்யர்

இருப்பினும் அந்த நீதிபதியின் பெயரை கிருஷ்ணய்யர் வெளியிடவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணய்யர் கூறுகையில், கே.ஜி.பாலகிருஷ்ணன் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதக் கூடாது என்று அந்த நீதிபதி என்னைக் கேட்டுக் கொண்டார். கிட்டத்தட்ட அது ஒரு நெருக்குதல்தான். இருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை.
கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜனின் சொத்துக்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.
இப்போதைக்கு இதுதொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதும் திட்டம் எனக்கு இல்லை. பிரதமருக்கே இதுகுறித்து மீடியாக்கள் மூலம் தெரிந்திருக்கும் என கருதுகிறேன். எனவே அவரை நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக கே.ஜி.பாலகிருஷ்ணன் இதுவரை என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது நல்லது.விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும் முடிவெடுக்க வேண்டியது அவர்தான்.
பாலகிருஷ்ணன் மீது மட்டுமல்லாமல், அவரது சகோதரர், மகன், மருமகன்கள், மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினர் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
எனது இந்தக் கோரிக்கைக்கு நிறையப் பேர் ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, இது ஐயருக்கும், தலித்துக்கும் இடையிலான பிரச்சினை என்று கூறியிருப்பது குறித்து கிருஷ்ணய்யர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். கருணாநிதி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று மட்டும் அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications