அதிமுக தலைமையை விமர்சித்து விளம்பரம்: தேமுதிகவுக்கு தொடர்பில்லை-விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 9ம் தேதி சேலத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது. அதனையொட்டி கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், ஆதரவாளர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.
சற்றும் எதிர்பாராத வகையில் பத்திரிக்கை ஒன்றில் 7.1.2011 அன்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைமையை விமர்சித்து தேமுதிக நிர்வாகிகளின் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
தேமுதிகவுக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தேமுதிக நிர்வாகிகளான வி.சி. சந்திரகுமார் (கொள்கை பரப்புச் செயலாளர்) கே. செந்தாமரைக்கண்ணன் (மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்), விசாகராஜன் (துறைமுகப் பகுதிச் செயலாளர்), ஆர். கோவிந்தன் (ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர்) ஆகியோர் பெயரில் இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால் இந்த அற்பக் காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிகவைப் பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் விஜய்காந்த் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications