ஜெர்மன் வங்கிகளில் தமிழர்களின் கறுப்பு பணம்-சிபிஐ!
மதுரை: சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ. 27 லட்சம் கோடி உள்ளது. அதே போல ஜெர்மன் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் 15 பேரின் பெயர்களும் உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாண்டியன்,
மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் பெற்று தான் நீரா ராடியாவின் போன் பேச்சுக்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் மொரீஷியஸ் சென்று விட்டது. இந்த வழக்கில் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் சென்று தேவைப்பட்டால் யாரையும் கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கபில் சிபில், மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
தவறாக ஸ்பெக்ட்ரம் பெற்ற 6 நிறுவனங்களுக்கு விதித்த ரூ.210 கோடி ரூபாய் அபராதத்தில் இது வரை, ரூ. 177 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் தகுதியற்ற நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது நிரூபணமாகியுள்ளது. இதற்கு திமுக பதில் கூற வேண்டும்.
சுவிஸ் வங்கியில் இந்திய கருப்பு பணம் 27 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இது போல் உலகில் 16 வங்கிகள் உள்ளன. ஜெர்மன் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் 15 பேரின் பெயர்கள் உள்ளன.
ஜனநாயகத்தை மீட்க திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதிமுகஅணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பார்வர்ட் பிளாக் ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் மேலும் ஒரு கட்சி இடம் பெற உள்ளது என்றார்.
ஆனால் அந்த கட்சியின் பெயரை அவர் வெளியிடவில்லை.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications