கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் அச்சுதானந்தனை வெடிகுண்டு வீசிக் கொல்லப்போவதாக கேரள தலைமைச் செயலகத்திற்கு மர்ம போன் வந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலக அலுவலகத்திற்கு சம்பவதன்று டெலிபோன் அழைப்பு வந்தது. அங்குள்ள ஊழியர் ஒருவர் போனை எடுத்துப் பேசினார்.
அப்போது மறுமுனையில் பேசிய பெண் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அச்சுதானந்தன் அலுவலகத்தையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அந்த பெண் முதல்வர் அச்சுதானந்தனையும் வெடிகுண்டு வீசி கொல்வோம் என்று மிரட்டி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமைச் செயலக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து தலைமை செயலகம் முழுவதும் சோதனை போட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் போனில் பேசிய பெண் நெடுமாங்காட்டில் இருந்து தொடர்பு கொண்டது தெரிய வந்தது. அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications