பூடான் தலைநகர் திம்புவில் இந்தியா-பாக். வெளியுறவு செயலர்கள் பேச்சு
டெல்லி: பூடான் தலைநகர் திம்புவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் அடுத்த மாத தொடக்கத்தில் சந்தித்துப் பேசவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
திம்புவில் அடுத்த மாதம் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) நிலைக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்போது இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
பாகி்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி இந்தியா வரவுள்ளார். அதற்கு முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பி்ப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சார்க் நிலைக்குழுக் கூட்டம் திம்புவில் நடைபெறுகிறது. அப்போது இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் சந்தித்துப் பேசலாம் என்று தெரிவித்தார்.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும்போது சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான முன்னோட்ட சந்திப்பாக இது கருதப்படுகிறது.
கடைசியாக இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ், பாகிஸ்தான் செயலாளர் சல்மான் பஷீரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications