சிகிச்சை பெற வழியின்றி தவித்த நோயாளிக்கு உதவிய வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விபத்தில் காயமடைந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததால், அரசு பொது மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததால் தவித்து வந்த உ.பியைச் சேர்ந்த தொழிலாளிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உதவிக் கரம் நீட்டி சிகிச்சைக்கு வழி செய்துள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே, காயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக வைகோவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வட சென்னை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜீவனை அழைத்து, காயம் அடைந்தவர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யும் படி வைகோ கூறினார்.

இதையடுத்து ஜீவன் விரைந்து சென்றஅந்த நபரைக் கண்டுபிடித்து மீட்டார். அவரது பெயர் முகமது ஷா. 40வயதான இவர் உ.பியைச் சேர்ந்தவர். காலில் பலத்த காயத்துடன் இருந்தார். வேலையில் சேருவதற்காக சென்னை வந்தபோது சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து விட்டார்.

அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றபோது போலீஸ் வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்துள்ளது. இதனால் சிகிச்சை பெற வழியில்லாமல் தவித்துள்ளார்.

அவரை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று முதலில் முதலுதவி கொடுத்தனர். பின்னர் போக்குவரத்து காவல்துறையில் புகார் தரப்பட்டது. அவர்கள் விபத்து வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஷா. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது நலமடைந்து வருகிறார் ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+