2ஜி விவகாரம் குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்கிறது-அமைச்சர் நாராயணசாமி
சிதம்பரம்: 2ஜி விவகாரம் குறி்த்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. அவர்கள் முயற்சி ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தான் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில் உள்ள பா.ஜ.க. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தி பொய் பிரசாரம் செய்து வருகிறது. பாஜக -வின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் எடுபடாது. மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான தணிக்கைத்துறையின் அறிக்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அது முற்றிலும் தவறானது.
விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருடன் பேசப்பட்டுள்ளது. எனவே, வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications