ஜெகன் கட்சியின் பெயர் ராஜண்ணா ராஜ்ஜியம் : கட்சி தலைவர் ஒய். வி. சுப்பா ரெட்டி

கிருஷ்ணா நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜெகன் நேற்று டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருநதார். இதன் மூலம் அவரது பலத்தை அனைவருக்கும் தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவருக்கு ஆதரவாக 24 எம்.எல்.ஏ.க்களும், 2 எம்.பி.க்களும் உள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜெகன் ஆதரவாளர்களால் ஆந்திர அரசியலில் அதிர்ச்சி அலை வீசுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை ஜெகன் தனது கட்சிக்கு ராஜண்ணா ராஜ்ஜியம் என்று பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்தன. இந்த தகவல் சில பிரபல தெலுங்கு செய்தி சேனல்களில் மட்டும் வந்தது. இந்த புதிய கட்சி அடுத்த மாதம் துவங்கப்படும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருக்கிறார்.
ஜெகனின் புதிய கட்சியின் தலைவராக ஒய். வி. சுப்பா ரெட்டி, துணை தலைவராக எஸ். ராமகிருஷ்ணா ரெட்டி, பொதுச் செயலாளராக சிவசங்கர் ரெட்டி, இணை செயலாளராக டி. விஸ்வநாத ரெட்டி, பொருளாளராக கே. ஸ்ரீனிவாஸ் நாயுடு ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
நேற்று ஜெகன் உண்ணாவிரதத்தால் ஜந்தர் மந்தர் பரபரப்பாக காணப்பட்டது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் டெல்லி போலீசார் ஜெகனை கைது செய்ய வேண்டியதாகியது. ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications