பிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

Heavy Rain in Brazil Caus
ரியோடி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் எதிர்பாராத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 260 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டில் பொதுவாக இது மழைக்காலமில்லை. ஆனால் எப்போதுமில்லாத வகையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் ரியோடி ஜெனீரோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறு உடைந்து நகரப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. டெரசோபோலில் மற்றும் டெட்ரோபோலில் ஆகிய நகரங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு பெரும் வெள்ளம் புகுந்தது. இதில் மலையின் சில பகுதிகள் குடியிருப்புகளின் மீது சரிந்து விழுந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 260 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 800 பேர் கொண்ட மீட்பு படையினர் இதில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் தில்மா ரூசப் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால் ரியோடி ஜெனீரோ பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+