சென்னை கடல்சார் பல்கலைக் கழகம், துணைவேந்தர் வீட்டில் சிபிஐ ரெய்டு!
சென்னை: நிதி முறைகேடு புகாரின் அடிப்படையில் சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜயன் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் 2008 முதல் செயல்பட்டு வருகிறது. கடல்சார் படிப்புக்கு தமிழகத்தில் உள்ள ஒரே பல்கலைக் கழகம் இதுதான்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட வகுப்புகளில் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு இட ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக வாகனசெலவினங்கள் , கட்டடம் எழுப்புதல் போன்றவற்றில் செலவுகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இன்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்த சி.பி.ஐ.,யினர் ஆவணஙகள் நிலவரம் மற்றும் அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து கேள்விகள் எழுப்பினர்.
கொட்டிவாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விஜயன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் மேற்கொண்டனர்.
நேற்று (புதன்கிழமை) இந்த பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பாராட்டும், பட்டமும் வழங்கும் விழா முடிந்து, துணைவேந்தர் டெல்லி சென்ற நிலையில் இந்த ரெய்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பல்கலைக்கழகம் சென்னையில் அமைய கடுமையான போராட்டத்தை மத்திய அரசு கடந்த ஆட்சியின்போது சந்தித்தது. இப்பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு லோக்சபாவில் தாக்கல் செய்ய முயன்றபோது திரினமூல் காங்கிரஸ் கட்சியினரும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், பாலுவைத் தாக்கி மசோதாவைப் பறிக்க முயன்றது நினைனவிருக்கலாம். அந்த பல்கலைக்கழகத்தில்தான் இப்போது ஊழல் புகார் கிளம்பி ரெய்டு நடந்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications