சிஏஜியை களங்கப்படுத்தும் கபில் சிபல்: முரளி மனோகர் ஜோஷி கண்டனம்
டெல்லி: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் விமர்சித்ததற்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விமர்சனம் வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரிக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியின் செய்தியாளர்களிடம் பொது கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், "அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து முறையற்றது. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியது. சிஏஜி என்ற உயர்ந்த அமைப்பின் தலைமைக்கு இதுபோன்றதொரு கண்ணியக் குறைவு மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தலைமை கணக்கு, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டில் மாற்றுக் கருத்து இருந்தால், அமைச்சர் பொது கணக்குக் குழுவிடம் தெரிவித்திருக்கலாம். ஆனால் அமைச்சர் வெளிப்படையாக தனது கருத்தை வெளியிட்டது சரியல்ல, முறையற்றது.
இழப்பு எவ்வளவு என்பதை தோரயமாக மூன்று வெவ்வேறு வழிகளில் மதிப்பிட்டுள்ளார் தலைமை கணக்கு, தணிக்கை அதிகாரி. ஆனால், தான் கணக்கிட்டது தான் இறுதியானது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இதனை கபில் சிபல் புரிந்து கொள்ளவில்லை," என்றார்.
அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து உரிமை மீறல் குற்றத்துக்குள்ளானதா என்று கேட்டபோது, "இப்போதைய நிலையில் அமைச்சரின் கருத்து உரிமை மீறலா என்று சொல்ல இயலாது. ஆனால் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை குறை கூறுவது மீண்டும் நடைபெறாமல் தடுக்க பொது கணக்குக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார் ஜோஷி.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக பொது கணக்குக் குழு முன் ஆஜராக அமைச்சர் கபில் சிபலை அழைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கபில் சிபலுக்கு கணக்கு தணிக்கை துறை கண்டனம்:
இதற்கிடையே, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு இழப்பீடுபற்றிய தலைமை கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு குறித்து அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது முறையற்றது என்று கணக்கு, தணிக்கைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் விசாரணையில் இருக்கும்போது அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது நாடாளுமன்றத்தையே அவமதிப்பதாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications