சிஏஜியை களங்கப்படுத்தும் கபில் சிபல்: முரளி மனோகர் ஜோஷி கண்டனம்
டெல்லி: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் விமர்சித்ததற்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விமர்சனம் வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரிக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியின் செய்தியாளர்களிடம் பொது கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், "அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து முறையற்றது. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியது. சிஏஜி என்ற உயர்ந்த அமைப்பின் தலைமைக்கு இதுபோன்றதொரு கண்ணியக் குறைவு மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தலைமை கணக்கு, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டில் மாற்றுக் கருத்து இருந்தால், அமைச்சர் பொது கணக்குக் குழுவிடம் தெரிவித்திருக்கலாம். ஆனால் அமைச்சர் வெளிப்படையாக தனது கருத்தை வெளியிட்டது சரியல்ல, முறையற்றது.
இழப்பு எவ்வளவு என்பதை தோரயமாக மூன்று வெவ்வேறு வழிகளில் மதிப்பிட்டுள்ளார் தலைமை கணக்கு, தணிக்கை அதிகாரி. ஆனால், தான் கணக்கிட்டது தான் இறுதியானது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இதனை கபில் சிபல் புரிந்து கொள்ளவில்லை," என்றார்.
அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து உரிமை மீறல் குற்றத்துக்குள்ளானதா என்று கேட்டபோது, "இப்போதைய நிலையில் அமைச்சரின் கருத்து உரிமை மீறலா என்று சொல்ல இயலாது. ஆனால் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை குறை கூறுவது மீண்டும் நடைபெறாமல் தடுக்க பொது கணக்குக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார் ஜோஷி.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக பொது கணக்குக் குழு முன் ஆஜராக அமைச்சர் கபில் சிபலை அழைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கபில் சிபலுக்கு கணக்கு தணிக்கை துறை கண்டனம்:
இதற்கிடையே, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு இழப்பீடுபற்றிய தலைமை கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு குறித்து அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது முறையற்றது என்று கணக்கு, தணிக்கைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் விசாரணையில் இருக்கும்போது அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது நாடாளுமன்றத்தையே அவமதிப்பதாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications