புலிகள் ஆதரவு சிடியுடன் வைகோ-கைது செய்ய அன்பரசு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டசபைத் தேர்தலின்போது குழப்பத்தை விளைவிப்பதற்காக விடுதலைப் புலிகள் ஆதரவு சிடிக்களைத் தயாரித்துள்ளார். எனவே அவரைக் கைது செய்ய வேண்டும். மதிமுக தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி.அன்பரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ தயாரித்துள்ள குறுந்தகடுகளை (சி.டி.) கைப்பற்ற வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வைகோவை கைது செய்ய வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது என்று வைகோ கூறிவருவதை வன்மையாக கண்டிக்கிறேன். வைகோவின் ஆலோசனையால் தான் பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை மற்றும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் என்று அன்பரசு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+