மாணவ-மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டி: வைகோ பரிசு
களிங்கப்பட்டி: களிங்கப்பட்டியில் மாணவ, மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரிசு வழங்குகிறார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை ஓட்டி வையாபுரி-மாரியம்மாள் கோப்பை 12ம் ஆண்டு அறிவுத்திறன் போட்டிகள் களிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது. இதில் திருக்குறள் ஓப்புவித்தல், செஸ், வினாடிவினா, பேச்சு ஆகிய போட்டிகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தீவினை அச்சம், ஓழுக்கம் உடைமை, செய்நன்றி அறிதல் ஆகிய அதிகாரங்களில் 50குறல்களும், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அறன் வலியுறுத்தல், தெரிந்து கொள்ளுதல், சுற்றுசூழல், மருந்து பண்பு உடைமை, நட்பு ஆராய்தல், ஈகை, புகழ், ஆகிய அதிகாரங்களில் 80 குறள்களும் ஓப்புவிக்க வேண்டும்.
இளையோர் பிரிவில் 10 வயதுக்கு மேல் 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொதுபிரிவில் 17 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செஸ் போட்டி நடக்கிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெருகிறவர்களுக்கு வைகோ முன்பு பேச வாய்ப்பளிக்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசு வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications