கொள்ளையர்களிடம் இருந்து தப்பி பாலத்திலிருந்து விழுந்த பெண்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பைக்கில் வந்து வழிப்பறி செய்ய முயன்ற இருவரிடம் இருந்து தப்பிக்கும்போது பெண் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
கிழக்கு டெல்லியைச் சேர்ந்த மதுமிதா, லக்ஷ்மி நகரில் பணி புரிகிறார். நேற்று வேலையை முடித்துவிட்டு இரவு 9. 30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கர்காரி மோர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பைக்கில் வந்த 2 பேர் அவர் கைப் பையை அபகரிக்க முயன்றனர்.
உடனே அவர் மேம்பாலத்தில் வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அவர்கள் பின்னாலேயே வந்து அவரது பையைப் பிடித்து இழுத்துள்ளனர். அதில் பையின் கைப்பிடி அறுந்து விழுந்தது. பையை இழுத்துப் பிடித்திருந்த மதுமிதா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை லால் பகதூர் சாஸ்த்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications