எடியூரப்பா மீது நீதிமன்றத்தில் 2 ஊழல் வழக்குகள் பதிவு!

நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் எடியூரப்பாவுக்கு பங்கிருப்பதாகக் கூறி வழக்கறிஞர்கள் சிரஞ்சன் பாஷா மற்றும் கே என் பாலராஜ் ஆகியோர் இந்த வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எடியூரப்பாவின் இரு மகன்கள், மருமகனும் மல்லூரு எம்எல்ஏவுமான கிருஷ்ணையா ஷெட்டி மற்றும் இவர்களின் த்வாலகிரி ட்ரஸ்ட் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கை மோசடி, சட்டத்தை ஏமாற்றியது மற்றும் அரசுப் பணம் முறைகேடு போன்றவற்றின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் வரும் ஜனவரி 24-ம் தேதி கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஹிப்பாராகி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
அரசு நிலம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் எடியூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்து இன்று காலை உத்தரவிட்டார். இந்நிலையில், உடனடியாக முதல்வர் மீது இன்றே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் நகலைக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி கர்நாடக அமைச்சர்கள் பேரணி நடத்தினர்.
கர்நாடகா முழுவதும் பெரும் பாதிப்பு
இதற்கிடையே ஆளுநரை திரும்பப் பெறக் கோரி ஆளும் பாஜகவினர் நடத்திய பந்த் காரணமாக கர்நாடகத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மங்களூர், தும்கூர், தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 100 சதவீத பாதிப்பு இருந்தது.
இந்த பந்த் காரணமாக 31 பேருந்துகள் எரிக்கப்பட்டன. ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
ராஜினாமா செய்ய முடியாது - எடியூரப்பா
இந்நிலையில், ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என முதல்வர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?" என்று திருப்பிக் கேட்டார்.
பெங்களூரில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஒரு மாநில முதல்வர் மீது யாராவது வழக்குப் போட்டால் உடனே ராஜினாமா செய்வார்களா? இதுபோல எந்த மாநிலத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? நான் மட்டும் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?" என்றார் எடியூரப்பா.
இந்த விவகாரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர் நிதின் கட்காரியும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உத்தரவை எதிர்த்து வழக்கு
இதற்கிடையே, ஆளுநரின் இந்த உத்தரவுக்கு தடை கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கர்நாடக பாஜக முடிவு செய்துள்ளது. திங்கள் கிழமை வழக்குத் தொடரப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்து கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர் எடியூரப்பா மீது இப்போது வழக்குப் பதிவு செய்துள்ள சிரஞ்சன் பாஷா மற்றும் கே என் பாலராஜ்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications