ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக சாட்சியம் அளிக்க வருமாறு நாட்டின் தலைமைக் கணக்காயர் (சிஏஜி) வினோத் ராய்க்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி பிரதீப் சட்டா முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிஏஜி வினோத் ராய், சிஏஜி இயக்குனர் ஆர்.பி.சிங் ஆகியோர் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications