எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி... பாஜக கடும் அதிர்ச்சி!

ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிரஜின்பாஷா மற்றும் கே.என்.பால்ராஜ் ஆகியோர் கடந்த 2010 டிசம்பர் 28-ம் தேதி ஆளுநர் பரத்வாஜை சந்தித்து, முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி அளிக்குமாறு மனு அளித்திருந்தனர்.
இதற்கு ஆதாரமாக ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் புகார் மனுவுடன் இணைத்திருந்தனர்.
முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது பற்றி ஆளுநர் பரிசீலித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கையை கைவிடுமாறு கோரி கடந்த 19-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு கடிதம் மூலம் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆளுநரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஊழல் தடுப்பு சட்டம், 1988 பிரிவு 19 (1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 197ன் கீழ் முதல்வர், உள்துறை அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பாக உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இரு வழக்கறிஞர்களுக்கும் அனுமதி அளித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் மீது வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தார்.
முதல்வர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications