விருது நகரில் புதிய பொருளாதார மண்டலம்!-தமிழக அரசு

விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில்திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் நடந்தது.
அமைச்சர் சாத்தூர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முகாமில் பதிவு செய்து நேர்காணலில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் அறிவுரையின்படி விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தொழில் கல்வி படித்த வேலைவாய்ப்பற்ற சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது என்றும் இதன் மூலம் இளைஞர் களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்...," என்றார் அவர்.












Click it and Unblock the Notifications