எதியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி ஏன்?-உள்துறை அமைச்சகத்திற்கு பரத்வாஜ் அறிக்கை
டெல்லி: கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்தது ஏன் என்பதை விளக்கி மத்தியஉள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.
அதில் ஆளுநர் கூறியிருப்பதாவது:
இரு வழக்கறிஞர்கள் முதல்வர் எதியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். இதுதொடர்பாக மாநில அரசிடமிருந்து 93 ஆவணங்களைத் தருமாறு கோரியிருந்தேன். இதற்காக 17 நாள் அவகாசமும் தந்திருந்தேன். இருப்பினும் 80 ஆவணங்களை மட்டுமே அரசு கொடுத்தது.
மற்ற 13 ஆவணங்களை இரு வக்கீல்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருந்தனர்.
இந்த 93 ஆவணங்களையும் பரிசீலித்த பின்னர் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கும் முடிவுக்கு வந்தேன் என்று அவர் கூறியுள்ளார். ஆளுநரின் செயல் சரியானதே என்று நேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications